இந்தியாவின் முதல் தேசிய கூட்டுறவுச் பல்கலைக்கழகம்

6 months ago 15.5M
ARTICLE AD BOX
இந்தியாவின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் குஜராத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பல்கலைக்கழகத்தின் துவக்கத்தை வெகு சிறப்பாக நடத்தினார். கூட்டுறவு துறையில் நீடிக்கும் குடும்ப ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவது மற்றும் பயிற்சியில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வது இதன் முக்கிய நோக்கமாகும். இந்த புதிய பல்கலைக்கழகம், கூட்டுறவுத் துறையில் தொழில்முனைவோருக்கு நவீன மற்றும் தரமான கல்வியை வழங்குவதற்கு பிரதானமாக இருக்கும். இத்துறை ஊழியர்களுக்கான பயிற்சிகள், தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் நவீன உத்திகள் உள்ளிட்டவை கற்பிக்கப்படும். இதன்மூலம், நாட்டின் கூட்டுறவுத் துறையில் புதிய மாற்றங்கள் ஏற்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி, நாட்டின் கூட்டுறவுத் துறையின் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என துறைசார் நிபுணர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, இத்துறை தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் இப்பல்கலைக்கழகத்தின் மூலம் ஊக்குவிக்கப்படும். தேசிய அளவில் பல்கலைக்கழகத்தின் துவக்கம், இந்தியாவின் கூட்டுறவுத் துறைக்கு ஒரு பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

— Authored by Next24 Live